" கள்வர் கள்வன் " கள்ளர் சாதியா..?
கள்வர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியப் பாக்களிலேயே பல இடங்களில்
பதியப்பட்டுள்ளதை நாம் அறிவோம், சங்க இலக்கியங்கள் அக்காலத்திய வேந்தர்களைக் குறிக்குமிடத்து
சிறப்புடன் இந்த சொல்லாட்சியைக் கையாண்டுள்ளன ! மேலும் இதன் தொடர்ச்சியாகத்தான்
பிற்கால பாண்டிய, சோழ
வேந்தர்களும் கூட தம்மை " கள்ள வேந்தன்" , "கள்ளப் பெருமான்" , "
கள்வன்
" என்றெல்லாம் பலவாராக தத்தமது கல்வெட்டுகளில் பதிந்து கொண்டுள்ளனர் என்பதும்
நமக்கு சொல்லாமலேயே விளங்கும் ! இவ்வாறாக கள்வர் என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உயரிய பொருளில்
கையாண்டுள்ளன...
ஆனால் 'வார்த்தைகளின்
பொருளை ' அந்தந்தக்
காலகட்ட அரசியல் நிலையோடு ஒப்புமைப்படுத்தி முறையான ஆய்வியல் அணுகுமுறையைக்
கையாளாமல் சிலர் பழங்காலத்திய கள்வரை இந்நாளைய 'கள்ளர்' சாதியினரோடு தொடர்புபடுத்தி எழுதி
வருகின்றனர். அந்த வகையில் சோழ, பாண்டிய மன்னர்களைப் போலவே " கள்வர் கள்வன்" என்ற
பெயரால் செந்தலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள முத்தரையர் மரபுவழி மன்னரான
"சுவரன் மாறனாகிய இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்" கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவராக
இருக்கலாம் என்கிற ரீதியில் தற்காலத்தில் சிலர் ஆய்வு என்கிற பெயரில் தங்களின் 'அரைவேக்காட்டுத்தனத்தை' வலைதளங்களில் பதிவாகப் பதிந்து
வருகின்றனர்! இவர்களைப் பொறுத்தமட்டில் கள்வன் என்றவுடனேயே அது கள்ளர் என்கிற
தனியொரு சாதியாக மாறிவிடுகிறது.
முதலில் கள்வருக்கும் கள்ளருக்குமான தொடர்பு என்ன என்பதைப் பற்றி
ஆராய்வோம்... வழிப்பறி, கொள்ளை, வேற்றுப் புலத்தாரிடமிருந்து
கவர்ந்து வருதல் போன்ற களவுச் சம்பவங்களைக் குறிக்குமிடத்து கள்ளர் என்கிற
வார்த்தையும், சில
இடங்களில் கள்வர் என்கிற வார்த்தையும் சங்கப் பாக்களில் பயின்று வருகின்றன. அதேநேரத்தில்
சில இடங்களில் அரசன், தலைவன், வேந்தன் என்கிற பொருளிலும் 'கள்வன் 'என்ற வார்த்தை பாக்களில்
பயின்றுவரக் காண்கிறோம்! எனவே எதைக் குறித்து வருகிறது என்பதைப் பொறுத்தே கள்வனுக்கு
விடைகாண முடியும்...
உதாரணத்திற்கு சீவக சிந்தாமணியில் செய்யுள் எண் 741 ல் " கள்ளராற் புலியை வேறு
காணிய'" எனும் தொடரை விளக்குமிடத்து நச்சினார்க்கினியார் " அரசரைக் கொண்டு
சீவகனைப் போர்காண வேண்டி.." என்று பொருள் கொள்கிறார். அதாவது இச்செய்யுளில் 'கள்ளர் ' எனும் சொல்லினை 'அரசர் ' என்பதாக பொருள் காண வேண்டுமே
தவிர திருடன் என்று பொருள் கூற முடியாது!
அதுபோலதான் செந்தலைத் தூண்
கல்வெட்டுகளிலோ அல்லது கிள்ளுக்கோட்டை நடுகல்லிலோ குறிக்கப்பட்டுள்ள 'கள்வர் கள்வன்' என்ற சொல்லை ஆதாரமாக்கி
பெரும்பிடுகு முத்தரையரை 'களவில்
உயர்ந்தவர் ' என்று
நாம் பொருள் சொல்ல முடியாது. 'மல்லர் மல்லா' என்றால் மல்லர்களுக்கெல்லம்
மல்லன், 'மறவர்
மறவ' என்றால்
வீரருக்கெல்லாம் வீரர் என்று பொருள்படுவதைப் போலதான் ' கள்வர் கள்வன்' என்பது அரசரில் உயர்ந்த அரசன், மூத்த அரசன் என்று பொருள்படுமே
தவிர கள்ளன் ( திருடன்) என்று பொருள்படாது...
நடுகல் ஆராய்ச்சியாளரான இரா. பூங்குன்றன் போன்றவர்கள் கூட (
தொல்குடி- வேளிர்- அரசியல்) கள்வர் என்கிற வார்த்தை மிகப் பிந்தைய காலத்திலேயே திருடன் என்கிற
ஒற்றைப் பொருளைத் தருகிற சொல்லாக சுருங்கிவிட்டதை பதிவு செய்துள்ளதை இங்கு நாம்
கவனத்தில் கொள்ளலாம்.
மேலும் முத்தரையர்களையும், கள்ளர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்ளும்
போக்கு பலகாலமாகவே வரலாற்றாசிரியர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு
உதாரணமாகச் சில நடைமுறைகளைச் சொல்லலாம்...
1881 ம் ஆண்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்தரையர்
சமூகத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் தங்களை கள்ளர் சாதி என்பதாக பதிவிடுவதை எதிர்த்து ஆங்கிலேய
அரசுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலூர் வட்டாரக் கள்ளர்கள் வெள்ளையர்
காலம் முதல் தங்களை 'அம்பலகாரர்
' என
கூறிக் கொண்டமையால் முத்தரைய அம்பலகாரர்களையும் அக்காலத்தில் கள்ளர் சாதியாக
கணக்கிட முனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்...
இதேபோல புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1931 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட
சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டிலும் கூட முத்தரையர் சமூகத்தின் உட்பிரிவினரான வலையர், சேர்வை, அம்பலகாரர் மக்களை கள்ளர்
சாதியோடு சேர்த்து கணக்கிட்டுள்ளனர்...
முத்தரையர்களுக்கும் , கள்ளர்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லையென்றாலும் சிலரின் கடந்த காலத்திய தவறுகளால் இருசமூகத்தினரையும்
ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.
குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ந. மு.
வேங்கடசாமி நாட்டார் போன்றோரே கள்ளரையும், முத்தரையரையும் ஒன்றாக
இணைத்தும், குழப்பியும்
பேசியுள்ளனர் , கல்வெட்டு
ஆசிரியர்களின் சிலரின் முரண்பட்ட ' சொல்லாடல்' குறிப்புகளை இவர்கள் ஆதாரமாக சொல்லிக்கொண்டு, 'கள்வன் ' என்று பெரும்பிடுகு முத்தரையர்
குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர் கள்ளர் வகுப்பினரே என்று கதையளந்துள்ளனர்.
உள்ளபடி
பார்த்தால் செந்தலை கல்வெட்டுகள் என்பவை இலக்கியப் பாக்களே! அவற்றில்
முத்தரையர்களின் பல பட்டங்கள் இடம்பெற்றுள்ளன தவிர எந்த இடத்திலும் அவர்களின்
குலம் குறித்த குறிப்புகள் இல்லை. சத்ருமல்லன், அதிசாகசன், ஸ்ரீமாறன், அபிமான தீரன், சத்ருகேசரி, தமராலயன், செருமாறன், தஞ்சைக் கோன் என்ற பல பட்டப்
பெயர்களுள் ஒன்றாக கள்வர் கள்வன் என்பதும் வந்துள்ளது! எப்படி இந்தப் பட்டங்களின் ஒன்றில் 'கோன் ' என்று வந்திருப்பதாலே முத்தரைய
மன்னர்களை கோனார்கள் என்று சொல்லிவிட முடியாதோ அப்படியேதான் கள்வன் என்ற சொல்லை
கள்ளராகவும் வகைப்படுத்திட முடியாது...
வேங்கடசாமி நட்டாருக்கு கடந்த நூற்றாண்டில் "கள்ளர்
சரித்திரம் " என்ற நூலை எழுதுவதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதும், அதிலும் குறிப்பாக தென்பகுதி கள்ளர்களையும், பிறமலைக் கள்ளர்களையும்
காட்டிலும் தஞ்சைக் கள்ளரை உயர்த்திப் பிடிக்க வேண்டியதற்கான அவசியம் நாட்டாருக்கு
ஏன் ஏற்பட்டது என்பதையும் முதலில் நாம் உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கள்ளர் சமூகத்தின் மீது
வெள்ளையர்களால் தீவிரமான முறையில் திணிக்கப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தின்
கொடூரத்திலிருந்து "தஞ்சைக் கள்ளர்கள்" தம்மை தனிமைப்படுத்திக்
கொள்வதற்காகவே சில மன்னர்களோடும், புகழ் வாய்ந்த ஆன்மிக அறச்செயலாளர்களுடனும் தங்களை ஒப்பிட்டு
1920களுக்குப் பிறகு புத்தகங்களை எழுதி அதை வெள்ளையர்களிடத்தில்
ஆவணமாகச் சமர்ப்பித்து அந்த சட்டத்திலிருந்து தம்மை தப்பிவித்துக் கொண்டனர் என்பது
வரலாறு...
எந்த
அடிப்படை ஆதாரங்களுமின்றி முத்தரைய மரபினரையும், முத்தரைய வேந்தரான திருமங்கை
ஆழ்வாரையும் கள்ளர் சாதியாக உருவகப்படுத்த வேண்டிய அவசியம் இதன் காரணமாகவே
வேங்கடசாமி நாட்டாருக்கு ஏற்பட்டது என்பதை அக்கால அரசியல் குறித்து ஊன்றிப்
படிப்போரால் எளிதாக உணர முடியும்... அந்தப் புத்தகத்திலும் கூட வேங்கடசாமி
நாட்டார் கள்ளர்களை முத்தரையர்களோடு
'உடன் இணைத்துக் கொண்டாரே தவிர' கள்ளர்கள்தான் முத்தரையர் என்று
'உரிமை கோரவில்லை '
கள்ளர் சமூகத்தை சேர்ந்த திரு முகில்நிலவன் அவர்களின் 'தமிழ் இலக்கியத்தில்
குற்றப்பரம்பரையினர்' புத்தகத்தின்
கட்டுரை மட்டுமல்லாது சுந்தரவந்தியத் தேவனின் “பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்"
நூலிலும் (பக்க எண்: 650) தெளிவான முறையில் நான் மேற்சொன்ன தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முத்தரையர்களின் வரலாறு கள்ளரின
மக்களின் ஒரு பிரிவினரை "குற்றப் பரம்பரை " எனும் கொடும்
சட்டத்திலிருந்து காப்பாற்றியுள்ளது என்றால் அதை பெருமைக்குரிய வரலாற்றியல் நிகழ்வாக
நினைவில் நிறுத்திக் கொள்வதில் தவறில்லை... ஆனால் பாவாணர் போன்ற மொழி
ஆய்வாளர்களே கள்ளர் சாதியைத்தான் முத்தரையர் என்று பதிவு செய்துள்ளனர் என்றெல்லாம்
கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதை எப்படி ஏற்றுக கொள்ள முடியும்..? சரி அவர்கள் சொல்லும் ' தமிழர் வரலாறு' நூலில் பாவாணர் என்னதான்
சொல்லியிருக்கிறார் என்று பார்த்தோமேயானால்
" தஞ்சை மாவட்டத்தில் ' செம்பிய முத்தரையர்' பட்டம் கொண்ட கள்ளர்கள் முத்தரையர்களின் " படை மறவர்" வழிவந்தோராக இருக்கலாம்..."
" தஞ்சை மாவட்டத்தில் ' செம்பிய முத்தரையர்' பட்டம் கொண்ட கள்ளர்கள் முத்தரையர்களின் " படை மறவர்" வழிவந்தோராக இருக்கலாம்..."
என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர கள்ளர்கள்தான் முத்தரையர் என்று
ஓரிடத்திலும் சொல்லவில்லை! இந்த மூன்று வரிகளை மட்டும் படம் பிடித்து வைத்துக் கொண்டு வரலாறு
பேசும் கள்ளர் வரலாற்றாய்வாளர்கள் அதற்கு மேலேயுள்ள வரியில்
" இன்றைய திருச்சி மாவட்டங்களில் பயிர்த் தொழில் செய்து வாழும் முத்திரியர்களே பண்டைய முத்தரையர் வழியினர்"
என்று பதிவு செய்துள்ளதை வசதியாக மறைத்து விடுகின்றனர்.
மேலும் அதே
தமிழர் வரலாறு புத்தகத்தில் " இற்றைப் பிறவி குலங்கள்" எனும் தலைப்பில்
அம்பலக்காரன் எனும் பிரிவினரே முத்தரையர், வலையர், வன்னிய வலையர் என்று பிரிவுற்று
இருப்பதையும் பாவாணர் ஐயா தெளிவாகச் சுட்டியுள்ளார் இதையும் கள்ளர்கள் கணக்கில்
கொள்வதில்லை!
படை மறவர் வழியினர் என்பதற்கும், இந்தச் சாதியின் வழிவந்தோர்
என்பதற்குமான வேறுபாட்டை அறிய முடியாதவர்களை எண்ணி வியப்படையவே முடிகிறது! மேலும் ' செம்பிய முத்தரையர் ' பட்டம் தஞ்சை கள்ளர்களுக்கு வழக்கில் இருக்கிறது என்பதைக் கூட
பாவாணர் ஐயா "கள்ளர் சரித்திரம் " எனும் நூலிலிருந்து தான்
எடுத்தாளுகிறாரே தவிர நடைமுறைச் சான்று ஏதும் இல்லை...
பட்டம் போதுமா சாதியை வரையறுக்க...?
வேட்டுவ மரபினரான வலையர்
குடியினரே பின்னாட்களில் முத்தரையர் என்று அழைக்கப் பெற்றனர் என்பதற்கு பல நூறு
சான்றுகள் இருக்கின்றன. கல்வெட்டு, பட்டயம், இலக்கியம், கடவுள் வழிபாடு , முத்தரைய மன்னர்களுடனான தொன்மத்
தொடர்பிற்கான நிகழ்காலத்திய சான்றாக பட்டயங்களில் பயின்று வந்து இன்றும் தொடரும்
கரைப் பெயர்கள் என்று அவற்றை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்... ஆனால் கள்ளர்கள்
முத்தரையர் என்பதற்குக் கூட சான்றுகள் வேண்டாம், முத்தரையர் பட்டம் அவர்களுக்கு
இருக்கிறது என்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பட்டயமாவது இருக்கிறதா என்றால் ஒன்றும்
கிடையாது! முத்தரையர்களின் ஆட்சி முற்றுப் பெற்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்
திடீரென்று 21 ம் நூற்றாண்டில் வந்து நாங்கள்தான் முத்தரையர் என்பது
நகைப்பிற்குரிய வரலாற்று முரணே தவிர வேறில்லை.
வலையர், முத்துராசா, அம்பலகாரர், காவல்காரர், அரையர் , சேர்வை என்று பலவாக
உட்பிரிவுகளாக பிரிவுற்றிருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு கரைப் பெயரும் கூட
பட்டயங்களில் முத்தரையர் என்றே பயின்று வந்துள்ளது, இன்றைக்கு நேற்றல்ல ஆயிரம்
ஆண்டு காலத்திய வரலாற்றுத் தொடர்பின் வழிவந்தது அவை!
வலையர் என்கிற தொன்மத்தின் வழியினராகிய முத்தரையர் மக்கள் வெறும்
பட்டமாக அதை சூடவில்லை, அது
சாதியாகவே அவர்களோடு பன்னெடுங்காலமாக ஒன்றி வந்துள்ளது! தமிழகத்தில் வேறு எந்தவொரு
சமூகமும் ' முத்தரையர்
சாதி' என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ' தமிழ் கல்வெட்டியல் வரலாறு' எனும் புத்தகதில் இடம்பெற்றுள்ள
திருச்சிராப்பள்ளி மாவட்டம் அழுந்தூர் கல்வெட்டு " காடையான் வலையன் குறிச்
சேந்தனான பெரியநாட்டு முத்தரையன்" என்பவனைக் குறிக்கிறது. இந்தக் கல்வெட்டு
குறிப்பிடும் காடையான் கூட்டத்தினர் இன்றளவும் திருமயம் பகுதியில் காடன், காடையன் என்ற பெயரில் வாழ்ந்து
வருகின்றனர்.
அதேபோல புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் எண் 926, 906
ஆகியன
கோனாட்டு முத்தரையன், செவந்தி
முத்தரையன் போன்றவர்களை வலையர்கள் ஒன்று கூடி 'சாதி நீக்கம் ' செய்துள்ளதைக் குறிப்பிடுகிறது!
ஒரே சாதிக்குள்தான் சாதி நீக்கம் நடைபெற முடியும் . மற்றும் புல்வயல் கல்வெட்டு (
எண் 847 ) அவ்வூரைச் சேர்ந்த கடம்பராய முத்தரையன், எழுந்தாரமைந்த முத்தரையன், தேவேந்திர முத்தரையன் உள்ளிட்ட மூன்று வலையர் என்றும்
குறிப்பிடுகிறது.
மேலும் கி.பி 1127 ம் ஆண்டுகாலத்திய விக்கிரமச் சோழனின் கல்வெட்டு ' வலையன் கடியாறனுக்காக வாணராய
முத்தரையன் ' நந்தா
விளக்கு ஒன்றை கோயிலுக்கு வைத்துள்ள தகவலை தொல்லியல் ஆவணத்தின் ( 12/
2001) ஒழிந்தியாம்பட்டு
ஊர் கல்வெட்டு நமக்கு அறியத் தருகிறது, மறைந்த தந்தைக்கு தனயன் விளக்கு வைப்பதும், அண்ணனுக்கு தம்பி விளக்கு
வைப்பதும் பழங்காலத் தமிழர் வழக்காகும்.
இதுபோல வாணதிராயர் போன்ற குறுநிலத் தலைவர்களால் வழங்கப்பெற்ற
நூற்றுக்கணக்கான பட்டயங்கள் வலையர் என்போரே முத்தரையர் என்று சான்றுடன்
நிறுவுகிறது! கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை தனிப்பதிவாக பதிகிறேன்...
அருமையான பதிவு
ReplyDeleteஅருமை யான பதிவு
Deleteதொன்று தொட்டு கல்வியறிவில்லா மக்களிடம் தங்களது சாதியை கேட்ட போதெல்லாம் அவர்கள் மனதார உண்மையைத்தான் சொல்லி வந்திருக்கின்றனறே தவிர வேறு சாதிக்கு அவர்கள் உரிமை கொண்டாடியது கிடையாது. இப்பொழு இவர்கள் செய்வது திருட்டுத்தனம்.
ReplyDeleteபள்ளி இனத்தவருக்கும் முத்தரையர் பட்டமுள்ளதை கல்வெட்டுகளில் காணலாம்.
ReplyDeleteபள்ளி இனத்தவருக்கும் முத்தரையர் பட்டமுள்ளதை கல்வெட்டுகளில் காணலாம்.
ReplyDeleteகள்ளத்திருமங்கையாழ்வார் என கல்வெட்டு இருக்கிறது. திவ்யசூரிசரிதம் கள்ளர் மறவர் என்றுதான் சொல்கிறது.
ReplyDeleteவலையர் எப்படி அலசல் சாதிப்பெயரோ அதேபோன்றுதான் கள்ளர் மறவர் என்பதும் அலசல் சாதிப்பியராகும். முத்தரையர் என்பது பலசாதிகளுக்கான பட்டம். நீங்கள் முத்தரையர் எனும் பட்டப்பெயருக்கீடாக கள்ளர் எனும் சாதிச்சொல்லை வைப்பது தவறாகும்.ஒரு பட்டப்பெயருக்கீடாக பட்டப்பெயரைத்தான் வைக்கவேண்டும். தேவர் என்பது பட்டம். அதுபோலவே முத்தரையர் என்பதூஉம் பட்டம். வலையர் என்பது சாதி. அதுபோலவே கள்ளர் என்பதூஉம் சாதி.
கள்வன் என்பது மன்னரை குறிக்கவில்லை, அது ஒரு உவமை
ReplyDeleteSOUTH INDIAN INSCRIPTIONS- VOLUME XIII - INSCRIPTIONS OF RAJAKESARIVARMAN - No. 299 - (A.R. No. 169 of 1928.) - Tiruppalanam, Tanjore Taluk, Tanjore District - On the south wall of the central shrine, Apatsahayesvara temple - This is damaged in places. It records a gift of 397 � palam of (?) to the temple of Mahadeva at Tiruppalanam by Marpidugu Tirukkottiyur-Kalvan Amarkalan (or Makalan ?) Anai-Udaiyan. The donor, to judge by his name, seems to have been a Muttaaiyar chief ruling over a tract of the Ramnad district. A record of Aditya I. மார்பிடுகு முத்தரைய வழி வந்த மன்னர் தன்னை கள்ளன் என குறித்துள்ளார். இதுவும் மன்னரை குறிக்கும் சொல்லா?
ReplyDeleteகள்வனமாகாலன் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா 😂 அவர்களின்
Deleteகள்ளராற் புலியை வேறு காணிய, கள்ளரை கொண்டு புலியாக சீவகனை பலி கொள்ள திட்டமிட்டதாக கூறுகிறார், கள்ளரை கொண்டு புலியை பலியிடுவது போல், மற்ற மன்னர்களை கொண்டு சீவகனை கொல்ல திட்டமிட்டுள்ளார்! சீவகனை புலி என குறித்ததால், சீவகனுக்கு புலி என பொருள் படுமா?
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇதில் உள்ள அனைத்து உண்மை அல்ல அனைத்தும் முன்னுக்கு பின்னாக உள்ளது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை பதில் பதிவு
ReplyDeleteஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் அனைத்தும் உண்மையே
ReplyDelete"மாற்பிடுகு முத்தரையர் என்னும் கள்வன்மாகாலன்"
ReplyDeleteகள்வன்மாகாலன் (கள்வர்+மா+காலன்)
கள்வர் = களப்பிரர் அல்லது திருடர்
மா = பெரிய
காலன் = எமன்,எதிரி
கள்வர்மாகாலன் = களப்பிரர்களுக்கு பெரிய எமனாவான்
கள்வன் மாகாலன் - கள்வர்களுக்கு பேரெதிரியாக விளங்கியவன்
உதாரணம் : நகர் - மாநகர் , மழை - மாமழை என்பதுபோல
கல்வெட்டு படியில் முதல் வரிசையில் தெளிவாக "கள்வனமாகாலன்" என்றும் நான்காம் வரிசையில் "கள்வநமாகானெந்" என்று தெளிவாக குறிப்பிடுகின்றது.
ஆனால் மொழிப்பெயர்பில் கள்வனமாகாலனை "கள்வன் அமரகாலன்" என்று எழுதியுள்ளனர் இது சின்ன தவறு தான் ஆனால் மொத்த அர்த்தத்தையும் மாற்றிவிட்டது.
முத்தரையர் மரபில் வந்த பெரும்பிடுகு மற்றும் மாற்பிடுகு கள்வர்களுக்கு எதிரியாக காலனாக இருந்தனர் என்று மிகத்தெளிவாக தெரிகின்றது
இங்கனம் கள்வர் என்பது களப்பிரர்கள் என்று பொருள் கொள்வதே சரியாகும்.
இங்கே சிலர் கள்வர்களையும் களப்பிறர்களையும் ஒன்றாக குழப்புகிறார்கள். களப்பிறர் 6ம்நூற்றாண்டுவரை தமிழகத்தை ஆண்ட கன்னடமொழிபேசிய சமணமதத்தவர்கள்.ஆனால் கள்ளர்கள் தமிழ்குடிகள் என்றும் கூறுகிறார்கள். அப்படியென்றால் கள்ளர்கள் எப்போதிலிருந்து தமிழ்குடியினர் என்ற கேள்வி எழுகிறது. இன்றைக்கும் கன்னடம்பேசும் இனத்தினர் திருச்சியில் உள்ளனர்.சாதி வேறு பட்டங்கள் வேறு. எல்லா சாதியிலும் ஒரே பட்டங்கள் இருக்கும். ஆனால் பலருக்கும் சாதி பொதுவாக இருக்காது.
ReplyDeleteசிறந்த ஆய்வியல் பதிவு நன்றி
ReplyDeleteCriminal tribe act came into tamilnadu in 1911 but in the book "CENSUS OF INDIA 1891", British government has mentioned kallar, maravar and agamudayors as militant caste.
ReplyDeleteHow militants caste became criminal tribe just in 20 years?
Everyone knows why criminal tribe act came into picture and total 237 castes were categorised as criminal tribe by British government.
சும்மா சமூக வலைதலத்தில் ஏதோ எழுதி சுய இன்பம் அடையலாம் மற்றபடி ஒரு பயனும் இல்லை.