தா னம நாட்டின் வரலாற்றில் சேந்தன்குடி கிராமத்திற்கு முக்கியப் பங்குண்டு, குறுந்தம்பாறையிலிருந்து
(கி.பி 15ம் நூற்றாண்டுகளில்) வானதிராயர்களால் அழைத்துவரப்பட்டு குடியமர்வு செய்யப்பட்ட போர்க்குடியினரான கொத்தமங்கலம் கிராமத்தின் 'எட்டுக் கரை முத்தரையர்'களோடு சம காலத்தில் தானம நாட்டில் குடியேற்றமடைந்தவர்கள்தான் சேந்தன்குடி கிராமத்தின் வழுவாட்டித் தேவர் உள்ளிட்ட மேல்பகுதி கிராம மக்கள்! இந்த வரலாற்று உண்மைகளை பட்டயங்களும், கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் குறிப்புகளும் நேரடியாகவே எடுத்துக் கூறுகின்றன. அதைப் பற்றி விரிவான அளவில் ஏற்கனவே பல தருணங்களில் இணையத்தில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் சேந்தன்குடி கிராம மக்களிடமும் நகல் எடுத்து வீட்டிற்கு வீடு கொடுத்தாயிற்று.
தற்காலத்திய கீரமங்கலத்தின் மேற்குப் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டு தொடங்கி 'தானவதரையர்' எனும் மரபினர் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உட்பட்ட குற்றரசுகளை இப்பகுதிகளில் நடத்தி வந்தனர். அதன் பிறகுதான் தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு கிராமம் முதல் தஞ்சை மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம் , மாவடுகுறிச்சிப் பகுதி வரை இருந்த கிராமங்கள் அனைத்தும் "தானம நாடு " என்று வழங்கப்பெற்றது. தானவதரையர் எனும் மரபினரின் வழிவந்தோர் இன்றளவும் 'தானண்' எனும் பட்டம் தாங்கி கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு ஆகிய கிராமங்களில் வசித்து வருகின்றனர். 'தானவ அரையர்' களின் அரண்மனை இருந்த இடம் இடிபாடுகளைக் கடந்து இன்றும் சில சுவர்களோடு ' அரண்மனைத் தோப்பு' எனும் பெயரில் எஞ்சி நிற்கிறது. முத்தரைய மரபினரான தானவதரையர்கள் பல கோயில்களை எடுப்பித்துள்ள செய்தி புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது ( கல்வெட்டு எண் : 804, 942, 921, 971, 1049) . ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் நீடித்த இவர்களின் ஆட்சி வெள்ளாற்றுப் பகுதியில் 'வானதிராயர்களின்' வரவிற்குப் பிற்பாடு முடிவிற்கு வந்தது. இந்நிலையில்தான் சில குடியேற்றங்கள் இப்பகுதியில் நடந்தது. (குடியேற்றத்தின் வாயிலாக வந்து சேர்ந்தவர்கள் இயல்பிலேயே போர்ப்படையினராக இருந்ததால் அவர்கள் தமது போர்க்குணத்தால் சில பூர்வகுடியினரை கருவறுத்து இப்பகுதிகளில் தமது ஆட்சியை நிலைநாட்டியதாகவும் சொல்லப்படுகிறது). பின்னாட்களில்
நாயக்கர் ஆட்சியின்போது உருவானதுதான் 'சேந்தன்குடிப் பாளையப்பட்டு'. மொத்தத்தில் தானம நாட்டு உருவாக்கத்திற்கு மிகப் பிந்தைய காலத்தில் உருவானதே சேந்தன்குடி சமீன் மற்றும் தானம நாட்டில் சேந்தன்குடி சமீன் என்பது ஆறு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சிறு பகுதிதானே தவிர , சமீன் மட்டுமே தானம நாடு கிடையாது.
கி.பி 1674ல் வெளியிடப்பட்ட பட்டயம் ஒன்று இந்த சமீனை 'முத்தரைய வளுவாடி சமீன் ' (ஆவணம் 22/ 2011) என்று குறிப்பிட்டுள்ளது. மற்றும் 1909, 1935 ஆண்டுகால ஆங்கிலேயர் அறிக்கைகளும், 1983 காலத்திய அரசுக் குறிப்பேடு ஒன்றிலும் தானம நாட்டு சமீன் வலையர் சமீன் என்றும் இதன் தலைவர்களுக்கு 'வழுவாடி' எனும் பட்டம் இருந்ததையும் தெளிவுபடுத்துகிறது. ஆனால் இவர்களை மறவர் என்றோ, அகமுடையார் என்றோ குறிப்பிடும் சிறு வரலாற்றுக் குறிப்பு கூட கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்றளவும் வழுவாட்டியர்கள் அம்பலகாரர் என்று அறியப்படுகின்ற முத்தரையர்களோடுதான் கொள்வினை கொடுப்பினைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாதிச் சான்றிதழும் அம்பலகாரர் என்றே வாங்கிக் கொள்கின்றனர்... சேந்தன்குடி கிராமம் அரசியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தானம நாட்டிற்குள் தவிர்க்க முடியாத கிராமமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் கடந்த மாதத்தில் சேந்தன்குடியைச் சேர்ந்த ஐயா திரு கந்தசாமி ஆசிரியர் அவர்களால் " தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் ஆசிரியர் அவர்கள் மேற்கண்ட நூலில் தமது ஆழ்ந்த புலமையையும், வரலாற்று அறிவையும் , தானவ நாட்டின் மண்சார் மக்களின் வாழ்வியல் ஒற்றுமைகளையும் பயன்படுத்தி சேந்தன்குடிப் பாளையக்காரர்களைப் பற்றிய முறையான வரலாற்றை ஆவணப்படுத்தாமல் திட்டமிட்டு திரிபுவாத நோக்கோடு வீரமிகு மரபினரான வழுவாட்டித் தேவர்களின் மேலான வரலாற்றை மடைமாற்றி அவர்களை பல சாதிகளுக்குப் பிறந்தவர்களாகச் சித்தரித்து இறுதியில் ஒட்டுமொத்தமாக தானாண்மைய நாட்டு முத்தரைய மக்கள் அனைவரையுமே முக்குலத்தோர் என்பதாக முடித்துள்ளார்...

மேலும் நூலின் வழியே ஆசிரியர் கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்து சட்டமன்றம் சென்ற மதிப்பிற்குரிய பெ. திருமாறன் சேர்வை அவர்களையும், திருச்சிற்றம்பலம் வைரவன் சேர்வை மற்றும் பேராவூரணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் மாநில முத்தரையர் சங்கப் பொதுச்செயலாளர் ஐயா குழ. செல்லையா ஆகியோரையும் தேவர் மரபினர் என்பதாக தன் கற்பனையின் வாயிலாக கதையளந்துள்ளார். ( இதே நடைமுறையை முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் சேர்வையாரிடம் கையாண்டால் "விளைவு..." என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ மாவீரனாரின் வரலாற்றைக் கூறுமிடத்தில் மட்டும் 'சேர்வைப் பட்டம் கொண்டவர் ' என்பதோடு கடந்து போயுள்ளார் ) இந்த கற்பனைக் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் 'சேர்வை'ப் பட்டத்தை குறிப்பிட்ட ஒரு சாதிசார்ந்த பட்டமாக அவர் பயன்படுத்தியுள்ளது வேடிக்கையாகும் .தமிழ் சாதிகளில் ஏறக்குறைய ஏழு பிரிவினருக்கு சேர்வைப் பட்டம் வழக்கிலுள்ளது என்பது பாமர மக்கள் கூட அறிந்த ஒன்றுதான். எனவே ஆசிரியர் அவர்கள் இப்படியான இடைச்செருகளைக் கையாள ஏதேனும் சிலரின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது... காலம்காலமாக சாதிச் சான்றிதழில் " முத்தரையர் " என்று குறிப்பிட்டுக் கொண்டு சலுகைகளை வாங்கிக் கொண்டு அரசுப் பணியைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு இப்போது நாங்கள் 'அவர்கள் ' ... நாங்கள் ' இவர்கள் ' என்று வியாக்கியானம் செய்வது எத்தனை பெரிய இழிந்த மோசடிக் குணம்...? கேடுகெட்ட செயல்...? இதே வழுவாட்டியார்களைப் பற்றி 1985 ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ( இராமசுப்புராம செல்லமுத்துத்துரை) தங்களை பழுவேட்டரையர்களின் வம்சாவளி என்றது, தற்போது தென்மலை, அழகாபுரி பகுதியிலிருந்து வந்தவர்களாக குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர், இதிலிருந்தே இவர்கள் எத்தனை பெரிய குழப்பவாதிகள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது..

தொடக்க காலத்தில் தங்கள் குடும்பத்தினரை மட்டும் மாற்று சமூகமாகச் சொன்னவர்கள் அதன் பிறகு வழுவாட்டியர்கள் அனைவரையும் தேவர்களாக்கி சித்துக்காடு, செருவாவிடுதி பகுதகளில் உள்ள அம்மரபினரை ஏமாற்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் படம் போட்ட பலகைகளை திறக்கச் செய்தனர், தற்போது இரு தினங்களுக்கு முன்பு சேந்தன்குடி கிராமத்திலும் சில முத்தரையர் சமூக இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஒரு பலகையைத் திறந்துள்ளனர். உள்ளபடி பார்த்தால் தானமநாட்டில் 'பதினொன்று நாட்டு அகமுடையார்' எனும் மரபினர் தொன்றுதொட்டு வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் முத்தரையர்களான வழுவாட்டிகளுக்கும் , அம்பலகாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அப்படியிருக்கும்போது உண்மையை அறிந்தோ அறியாமலோ( !? )திரு சேதுராமன் அவர்களின் 'மூவேந்தர் முன்னணிக் கழகம்' இவர்களைக் கொண்டு கிளை அமைப்பதை முத்தரையர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்... இரு சமூகங்களுக்கும் இடையேயான இணக்கமான போக்கினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் புத்தகம் வெளியிடப்பட்ட போதே, அதில் முத்தரையர்களை வீம்புக்கு இழுக்கும் வகையில் நூலாசிரியர் சில பதங்களைக் கையாண்டிருப்பதை நாகரிகமான முறையில் பக்க எண்களோடு சுட்டிக் காட்டி அதை அப்புறப்படுத்த வேண்டுமென சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மீண்டும் அதை நினைவுபடுத்தி... கட்டுக்கதைகளை வரலாறுகளாக எழுதி தேவையற்ற சச்சரவுகளை உருவாக்க வேண்டாம் என்பதையும் தானம நாட்டு முத்தரையர்களின் வராலாறு தெளிவாக உள்ளது, அதில் குறிப்பிட்ட சிலரின் அரசியல் சுயலாபத் தினவினைத் தீர்க்க எல்லோரின் பிறப்பினையும் 'பலகை திறக்கிறேன் பேர்வழி ...' என்று மடைமாற்றாமல் இருப்பது அனைவருக்குமே நலம் என்பதையும் முத்தரையர்களின் சார்பாக ஆணித்தனமாக சொல்லிக் கொள்கிறோம்....
https://www.facebook.com/durai.rajakumaran/posts/1064359563674361
துரை. இராஜகுமரன்
வடகாடு.