தா னம நாட்டின் வரலாற்றில் சேந்தன்குடி கிராமத்திற்கு முக்கியப் பங்குண்டு, குறுந்தம்பாறையிலிருந்து
(கி.பி 15ம் நூற்றாண்டுகளில்) வானதிராயர்களால் அழைத்துவரப்பட்டு குடியமர்வு செய்யப்பட்ட போர்க்குடியினரான கொத்தமங்கலம் கிராமத்தின் 'எட்டுக் கரை முத்தரையர்'களோடு சம காலத்தில் தானம நாட்டில் குடியேற்றமடைந்தவர்கள்தான் சேந்தன்குடி கிராமத்தின் வழுவாட்டித் தேவர் உள்ளிட்ட மேல்பகுதி கிராம மக்கள்! இந்த வரலாற்று உண்மைகளை பட்டயங்களும், கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் குறிப்புகளும் நேரடியாகவே எடுத்துக் கூறுகின்றன. அதைப் பற்றி விரிவான அளவில் ஏற்கனவே பல தருணங்களில் இணையத்தில் பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் சேந்தன்குடி கிராம மக்களிடமும் நகல் எடுத்து வீட்டிற்கு வீடு கொடுத்தாயிற்று.
தற்காலத்திய கீரமங்கலத்தின் மேற்குப் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டு தொடங்கி 'தானவதரையர்' எனும் மரபினர் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உட்பட்ட குற்றரசுகளை இப்பகுதிகளில் நடத்தி வந்தனர். அதன் பிறகுதான் தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு கிராமம் முதல் தஞ்சை மாவட்டத்தின் திருச்சிற்றம்பலம் , மாவடுகுறிச்சிப் பகுதி வரை இருந்த கிராமங்கள் அனைத்தும் "தானம நாடு " என்று வழங்கப்பெற்றது. தானவதரையர் எனும் மரபினரின் வழிவந்தோர் இன்றளவும் 'தானண்' எனும் பட்டம் தாங்கி கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு ஆகிய கிராமங்களில் வசித்து வருகின்றனர். 'தானவ அரையர்' களின் அரண்மனை இருந்த இடம் இடிபாடுகளைக் கடந்து இன்றும் சில சுவர்களோடு ' அரண்மனைத் தோப்பு' எனும் பெயரில் எஞ்சி நிற்கிறது. முத்தரைய மரபினரான தானவதரையர்கள் பல கோயில்களை எடுப்பித்துள்ள செய்தி புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளது ( கல்வெட்டு எண் : 804, 942, 921, 971, 1049) . ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் நீடித்த இவர்களின் ஆட்சி வெள்ளாற்றுப் பகுதியில் 'வானதிராயர்களின்' வரவிற்குப் பிற்பாடு முடிவிற்கு வந்தது. இந்நிலையில்தான் சில குடியேற்றங்கள் இப்பகுதியில் நடந்தது. (குடியேற்றத்தின் வாயிலாக வந்து சேர்ந்தவர்கள் இயல்பிலேயே போர்ப்படையினராக இருந்ததால் அவர்கள் தமது போர்க்குணத்தால் சில பூர்வகுடியினரை கருவறுத்து இப்பகுதிகளில் தமது ஆட்சியை நிலைநாட்டியதாகவும் சொல்லப்படுகிறது). பின்னாட்களில்
நாயக்கர் ஆட்சியின்போது உருவானதுதான் 'சேந்தன்குடிப் பாளையப்பட்டு'. மொத்தத்தில் தானம நாட்டு உருவாக்கத்திற்கு மிகப் பிந்தைய காலத்தில் உருவானதே சேந்தன்குடி சமீன் மற்றும் தானம நாட்டில் சேந்தன்குடி சமீன் என்பது ஆறு கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சிறு பகுதிதானே தவிர , சமீன் மட்டுமே தானம நாடு கிடையாது.
கி.பி 1674ல் வெளியிடப்பட்ட பட்டயம் ஒன்று இந்த சமீனை 'முத்தரைய வளுவாடி சமீன் ' (ஆவணம் 22/ 2011) என்று குறிப்பிட்டுள்ளது. மற்றும் 1909, 1935 ஆண்டுகால ஆங்கிலேயர் அறிக்கைகளும், 1983 காலத்திய அரசுக் குறிப்பேடு ஒன்றிலும் தானம நாட்டு சமீன் வலையர் சமீன் என்றும் இதன் தலைவர்களுக்கு 'வழுவாடி' எனும் பட்டம் இருந்ததையும் தெளிவுபடுத்துகிறது. ஆனால் இவர்களை மறவர் என்றோ, அகமுடையார் என்றோ குறிப்பிடும் சிறு வரலாற்றுக் குறிப்பு கூட கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்றளவும் வழுவாட்டியர்கள் அம்பலகாரர் என்று அறியப்படுகின்ற முத்தரையர்களோடுதான் கொள்வினை கொடுப்பினைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாதிச் சான்றிதழும் அம்பலகாரர் என்றே வாங்கிக் கொள்கின்றனர்... சேந்தன்குடி கிராமம் அரசியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தானம நாட்டிற்குள் தவிர்க்க முடியாத கிராமமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் கடந்த மாதத்தில் சேந்தன்குடியைச் சேர்ந்த ஐயா திரு கந்தசாமி ஆசிரியர் அவர்களால் " தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் வருத்தத்திற்குறிய செய்தி என்னவென்றால் ஆசிரியர் அவர்கள் மேற்கண்ட நூலில் தமது ஆழ்ந்த புலமையையும், வரலாற்று அறிவையும் , தானவ நாட்டின் மண்சார் மக்களின் வாழ்வியல் ஒற்றுமைகளையும் பயன்படுத்தி சேந்தன்குடிப் பாளையக்காரர்களைப் பற்றிய முறையான வரலாற்றை ஆவணப்படுத்தாமல் திட்டமிட்டு திரிபுவாத நோக்கோடு வீரமிகு மரபினரான வழுவாட்டித் தேவர்களின் மேலான வரலாற்றை மடைமாற்றி அவர்களை பல சாதிகளுக்குப் பிறந்தவர்களாகச் சித்தரித்து இறுதியில் ஒட்டுமொத்தமாக தானாண்மைய நாட்டு முத்தரைய மக்கள் அனைவரையுமே முக்குலத்தோர் என்பதாக முடித்துள்ளார்...
மேலும் நூலின் வழியே ஆசிரியர் கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்து சட்டமன்றம் சென்ற மதிப்பிற்குரிய பெ. திருமாறன் சேர்வை அவர்களையும், திருச்சிற்றம்பலம் வைரவன் சேர்வை மற்றும் பேராவூரணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் மாநில முத்தரையர் சங்கப் பொதுச்செயலாளர் ஐயா குழ. செல்லையா ஆகியோரையும் தேவர் மரபினர் என்பதாக தன் கற்பனையின் வாயிலாக கதையளந்துள்ளார். ( இதே நடைமுறையை முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம் சேர்வையாரிடம் கையாண்டால் "விளைவு..." என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ மாவீரனாரின் வரலாற்றைக் கூறுமிடத்தில் மட்டும் 'சேர்வைப் பட்டம் கொண்டவர் ' என்பதோடு கடந்து போயுள்ளார் ) இந்த கற்பனைக் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் 'சேர்வை'ப் பட்டத்தை குறிப்பிட்ட ஒரு சாதிசார்ந்த பட்டமாக அவர் பயன்படுத்தியுள்ளது வேடிக்கையாகும் .தமிழ் சாதிகளில் ஏறக்குறைய ஏழு பிரிவினருக்கு சேர்வைப் பட்டம் வழக்கிலுள்ளது என்பது பாமர மக்கள் கூட அறிந்த ஒன்றுதான். எனவே ஆசிரியர் அவர்கள் இப்படியான இடைச்செருகளைக் கையாள ஏதேனும் சிலரின் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது... காலம்காலமாக சாதிச் சான்றிதழில் " முத்தரையர் " என்று குறிப்பிட்டுக் கொண்டு சலுகைகளை வாங்கிக் கொண்டு அரசுப் பணியைப் பெற்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு இப்போது நாங்கள் 'அவர்கள் ' ... நாங்கள் ' இவர்கள் ' என்று வியாக்கியானம் செய்வது எத்தனை பெரிய இழிந்த மோசடிக் குணம்...? கேடுகெட்ட செயல்...? இதே வழுவாட்டியார்களைப் பற்றி 1985 ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ( இராமசுப்புராம செல்லமுத்துத்துரை) தங்களை பழுவேட்டரையர்களின் வம்சாவளி என்றது, தற்போது தென்மலை, அழகாபுரி பகுதியிலிருந்து வந்தவர்களாக குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர், இதிலிருந்தே இவர்கள் எத்தனை பெரிய குழப்பவாதிகள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது..
தொடக்க காலத்தில் தங்கள் குடும்பத்தினரை மட்டும் மாற்று சமூகமாகச் சொன்னவர்கள் அதன் பிறகு வழுவாட்டியர்கள் அனைவரையும் தேவர்களாக்கி சித்துக்காடு, செருவாவிடுதி பகுதகளில் உள்ள அம்மரபினரை ஏமாற்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் படம் போட்ட பலகைகளை திறக்கச் செய்தனர், தற்போது இரு தினங்களுக்கு முன்பு சேந்தன்குடி கிராமத்திலும் சில முத்தரையர் சமூக இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஒரு பலகையைத் திறந்துள்ளனர். உள்ளபடி பார்த்தால் தானமநாட்டில் 'பதினொன்று நாட்டு அகமுடையார்' எனும் மரபினர் தொன்றுதொட்டு வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் முத்தரையர்களான வழுவாட்டிகளுக்கும் , அம்பலகாரர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அப்படியிருக்கும்போது உண்மையை அறிந்தோ அறியாமலோ( !? )திரு சேதுராமன் அவர்களின் 'மூவேந்தர் முன்னணிக் கழகம்' இவர்களைக் கொண்டு கிளை அமைப்பதை முத்தரையர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்... இரு சமூகங்களுக்கும் இடையேயான இணக்கமான போக்கினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் புத்தகம் வெளியிடப்பட்ட போதே, அதில் முத்தரையர்களை வீம்புக்கு இழுக்கும் வகையில் நூலாசிரியர் சில பதங்களைக் கையாண்டிருப்பதை நாகரிகமான முறையில் பக்க எண்களோடு சுட்டிக் காட்டி அதை அப்புறப்படுத்த வேண்டுமென சொல்லியும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மீண்டும் அதை நினைவுபடுத்தி... கட்டுக்கதைகளை வரலாறுகளாக எழுதி தேவையற்ற சச்சரவுகளை உருவாக்க வேண்டாம் என்பதையும் தானம நாட்டு முத்தரையர்களின் வராலாறு தெளிவாக உள்ளது, அதில் குறிப்பிட்ட சிலரின் அரசியல் சுயலாபத் தினவினைத் தீர்க்க எல்லோரின் பிறப்பினையும் 'பலகை திறக்கிறேன் பேர்வழி ...' என்று மடைமாற்றாமல் இருப்பது அனைவருக்குமே நலம் என்பதையும் முத்தரையர்களின் சார்பாக ஆணித்தனமாக சொல்லிக் கொள்கிறோம்....
https://www.facebook.com/durai.rajakumaran/posts/1064359563674361
துரை. இராஜகுமரன்
வடகாடு.
This comment has been removed by the author.
ReplyDeleteஇது சம்பந்தமாக உங்களை தொடர்பு கொள்ள விரும்புகின்றேன் .
ReplyDeleteத.விஜயகுமார் அகமுடையார் ,
புதுச்சேரி மாநிலம்.
7845500777
தானான்மை நாட்டு சேர்வைகாரர்கள்
ReplyDeleteவலையர்கள் ஆக இருக்க முடியாது. அது சடங்குகளின் மாறுபடுகிறது. இறப்பு வீடுகளில் 8ம் நாள் சடங்கு வலையர் சமூகங்களில் இரவில் வைப்பார்கள். ஆனால் தானாைமை நாட்டு சேர்வைகாரர் கள் பகலில் தான் நடத்துவார்கள் இக்கூட்டத்தில் இறந்தவர் வீட்டாருக்கு ஏதேனும் குறைபாடு, பிரச்சனைகள் இருந்தால் அங்கு முறையிடலாம் அதற்கான தீர்வுகள் காணப்படும் ஏன் இறப்பவர் புதிதாக கல்யாணமான தம்பதி கனவர் எனில் ,மனைவி கர்பமாக இருக்கலாம். இதை மனைவி இச்சடங்கில் நீர் நிரம்பிய கலனில் மலர்களின் இதல்களை போடேவேண்டும்.அந்த இதழ்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இத்தனை மாதம் கர்பமாக உள்ளார் என்பதை உணர்த்து. ஊரார் அவைரை தூற்றுவதை தவிற்கவே இம்முைறை இச்செயல்முைறை தானான்மை நாட்டு சேர்வை காரர்களுக்கு மட்டுமே உரியது. சமூகங்களில் எத்தனை திரிபுகல் கூறப்பட்டாளும் இச்சடங்கு முறைகள் அடையாளப்படுத்தும். இதனை வலையர்கள் செய்யமாட்டார்கள். தானான்மை சேர்வைகாரர்கள் வதங்கொண்டான் பிறிவு.
மிக அருமையான பதிவு
Deleteஅருமையான பதிவு
Deleteஅருமையான விளக்கம்.
Deleteஇந்த பழக்கம் தானான்மை நாட்டு தமிழ் சொந்தங்களிடம் மட்டுமே உள்ளது.
ReplyDeleteசூப்பர் அருமமையான பதிவு
Deleteநீங்கள் சொல்லும் வெள்ளைகாரர் எழுதிய ஆவணத்தில் 30 வருடத்திற்கு முன் வழுவாடி என்று ஒரு சமுதாயமே இல்லை னு எழுதி இருப்பாங்க ஆனால்1881 இல் Britsh india census report இல் வழுவாடி மற்றும் வழுவாடி சேர்வைகாரன் என்று தெளிவாக எழுதி இருக்கும் அது மட்டுமல்ல முத்தரையர் என்ற பட்டத்தை அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் அதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கு வெறும் முத்தரையர் பட்டத்தை வைத்து மட்டும் வலையர் என்று சொல்லுவது தவறு தானவநாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் சடங்கு சம்பிரதாயதையும் வைத்து பார்க்க வேண்டும் அதே பகுதியில் வலையர் சமுதாய மக்களும் வாழ்கின்றனர் ஏன் அவர்களின் பழக்கவளக்கமும் தானவநாட்டார் palakavakamum மாறுபடுகிறது ஏன் இரு பிரிவினரும் திருமணவுரவு வைத்து கொள்ள வில்லை ஏனென்றால் தானவநாட்டில் யாருமே வலையர் இல்லை
ReplyDeleteஅருமையான பதிவு.. நாம் முன்னோர்கள் சேர்வைகாரர்கள் (தேவர்கள்)
Deleteவழுவாடியார் முக்குலத்தோர் இல் கள்ளர் குடியினர் என்று குறிப்பிடபட்டுள்ளது
ReplyDeleteபாப்பாநாடு சமீனானது தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலையில், பட்டுக்கோட்டைக்கு முன்னதாக 12 கிலோமீட்டர் தொலைவில் பாப்பாநாடு என்ற ஊரைத் தலைமை இடமாகக் கொண்ட சமீன் ஆகும். இது விஜய தேவர் என்ற பட்டம் பூண்ட கள்ளர் குலத்தினரால் ஆளப்பட்ட ஒரு சமீன். பாப்பாநாடுக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளுவாடி என்ற ஊரில் இவர்களின் அரண்மணை இருந்தது. இவர்கள் இங்கிருந்து ஆண்டதால் இவர்கள் வளுவாடியார், வழுவாடியார் என அழைக்கப்பட்டனர். இதன் சமீந்தாராக கி.பி. 1736இல் இருந்த ராஜஸ்ரீ ராமலிங்கம் விசயாத்தேவர் என்பவர் காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை என்னும் ஒரு ஊரை கொடையாக அளித்து அதை செப்பேட்டில் பதித்துள்ளார்.[1] 1879 ஆண்டுவாக்கில் பாப்பாநாடு சமீனானது 36 கிராமங்களோடு 23412 ஏக்கர் பரப்பளவோடு இருந்தது.[2]
11.05.1757 ஆம் ஆண்டு செப்பேட்டில், நல்லவன் விஜயதேவர் அவர்கள் குமாரன் ராமலிங்க விஜயத்தேவர் அவர்கள் பாப்பாநாட்டவர்களுக்கு காணியாக இருக்கிற மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயிலுக்கு அர்த்தசாம பூசைக்கு 46 பொன் இராசகோபால சக்கரத்தை வழங்கியிருக்கிறார். இன்றும் அந்த கோயில் பாப்பாநாடு ஜமீன் சிற்பம் வாழிப்பாட்டில் இருந்துவருகிறது
பாப்பாநாட்டு சேர்வைக்காரர் கள் இன்றளவும் முத்தரையர்களே
Deleteநல்லா புருஞ்சுங்கோ.. இது பாப்பநாடு அல்ல
Deleteதானாண்மை நாடு ..நாங்கள் பூர்வீகமான சேர்வைகாரர்கள் (தேவர்)
இது முற்றிலும் கதை ..வரலாறு கொஞ்சம் பாருங்களேன் பையா.. ...தானாண்மை நாட்டார் எல்லாம் தேவர்கள்.
ReplyDeleteஅதற்கு சாட்சியாக அவர்களின் பூர்வீக இடமான மதுரை(குறுந்தம்பாறை அல்ல அந்த ஊரின் பெயர் குறுந்தமொழி)-க்கு சென்று பாருங்கள்.
சேந்தன்குடி யின் நாகரீகம் கலாச்சாரம் எல்லாம் தேவர்களோடு ஒப்பானது.. வேண்டும் என்றால் அதன் அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டுகுங்க.. நானே சேந்தன்குடி இளைஞன் தா..
இவர்கள் பாண்டியன் மன்னரின் படைத்தளபதி யாக.. இருந்த போர்குடி மக்கள்
ReplyDelete*சிறு இளைஞர்கள் எங்களுக்கே தெரியுது.. இது உங்களுக்கு தெரியலயா..
#தானவநாட்டுகள்ளர் 🔰🔰🔰
ReplyDeleteதானவ நாட்டார்கள் வலயர் என்று வீண் வாதம் செய்பவர்கள் கவனத்திற்கு
தானவ நாட்டார்கள் அம்ப்லகாரர் என்ற பட்டத்தை வைத்து சாதி சான்று வாங்கி உள்ளார்கள் ஒப்புக்கொள்கிரேன் ஆனால் அம்பலக்காரர் என்ற பட்டம் கள்ளர்கள் உடையது என்பதை மறந்து விடாதீர்கள்
எனவே தானவ நாட்டார்கள் அவர்கள் உடைய கள்ளர் அம்ப்லகாரர் பட்டத்தை வைத்து தான் சாதி சான்று வாங்கி உள்ளனர் இங்கு யாருக்கும் வலயர் என்று சாதி சான்று இல்லை அதேபோல் நீங்கள் மட்டும் உங்கள் பட்டம்மான அம்ப்லகாரர், சேர்வை,முத்தரையர் என்று பல பெயர்களில் வாங்கி உள்ளிர்கல் நாங்கள் கள்ளர்கள் வாங்க கூடாதா,
சாதி என்பது வெறும் certificate இல் இல்லை அது அவர்களின் வாழ்வியல் முறை பழக்க வழக்கத்தில் உள்ளது
என்னால் தானவ நாட்டில் உள்ள பட்டங்களையும் தானவ நாட்டின் பழக்க வழக்கத்தையும் பயன்படுத்தும் வேறு சில கள்ளர் நாட்டு அமைப்பை காட்ட முடியும்
ஆனால் உங்களால் தானவ நாட்டில் பயன்படுத்தபடும் பட்டங்களையும் பழக்க வழக்கத்தையும் ஒரு வலயர் நாட்டு அமைப்பில் காட்ட முடியுமா
சற்று சிந்தியுங்கள் சும்மாயெல்லாம் போய் நாங்க கள்ளர்னு யாரும் உருட்ட முடியாது அப்படி சொன்னால் கள்ளர் அமைப்புகள் விட்டு விடுவார்களா?
ஒரு சின்ன உதாரணம் நாங்கள் சாவு வீடுகலில் சட்டை அணிய மாட்டோம்
அதே போல் எட்டு கும்பிடுவது பகலில் தான் கும்பிடுவோம்
ஆனால் வலயர் சாதியினர் சாவு வீடுகலில் சட்டை கலட்டும் பழக்கம் இல்லாதவர்கள அதேபோல் அவர்கள்
எட்டு கும்பிடுவது இரவில் தான் கும்பிடுவார்கல்
எந்த ஊர் வலயர் சாதியினர்
இந்த பட்டத்தை பயன் படுத்துராங்க அப்படி நீங்கள் யாரும் நிருபித்தால் நான் ஒத்து கொல்கிரேன்
தானவ நாட்டு குடும்ப பட்டங்கள்
1.தொண்டைமான்
2.முண்டர்
3.கோழியர்
4.பூச்சியர்
5.பரங்கியர்
6.சாளுவர்
7.சேர்வை
8.காங்கயர்
9.செம்பியர்
10.கூத்தர்
11.காலிங்கராயர்
12.ஒண்டிபுலியார்
13.கட்டயர்
14.பேயர்
15.வழுவாடியர்
16.மணவாளர்
17.பம்பாளியார்
18.பன்னிகொண்டான்
19.சங்கரர்
20.தேவர்
21.மலையர்
22.மழவராயர்
23.மாங்காட்டார்
24.சேர்வைகாரர்
25.அம்பலம்
26.இராசாளியார்
27. கச்சிராயர்
28.வணங்காமுடி வழுவாட்டி தேவர்
39.மானங்காத்தார்
30.சிங்கப்புலியார்
31.தோளர்
32.மணியார்
33.பனையர்
34.உடையார்
35.கொங்குராயர்
36.கருவான்டார்
37.பட்டுகோட்டையான்
38.பெத்தாச்சியார்
39.நரியர்
40.சொக்கநாச்சியார்
41.கொப்பியத்தேவர்
42.கட்டபெரியர்
43.சிவந்தார்
44.தானவதரையர்
45.வதங்கொண்டார்
46.ஆழந்தலிராயர்
47.ஆதித்தேவன்
48.தீர்த்தங்காரர்
49.வத்திராயர்
50.மருதன்
51.கருவர்
52.மோயன்
53.நெடுநாடர்
54.ஆண்டவராயர்
55.திருவாச்சியார்
56.வழுதி
57.குடுமியார்
58.வண்டிக்காரர்
59.வாண்டார்
60.கொடிராயர்
61.பாம்பாட்டியார்
62.சொக்கராயர்
63.சிற்றாச்சியார்
64.காசியர்
அது மட்டும் அல்ல தானவ நாட்டு பகுதியிலும் அதன் சுற்று பகுதியிலும் வலயர் சமுகத்தினர் கூடவே வாழ்ந்து வருகின்றனர் அப்படி இருவரும் ஒரு சாதியினர்களாக இருந்தால் பழக்க வழக்கத்தில் ஏன் ஒத்து போக வில்லை இருவரும் திருமணம் உறவுமுறை ஏன் வைத்து கொள்ள வில்லை
வரலாற்றை மாற்றி அமைப்பவர்கள்க்கு உண்மை என்னவென்று நன்றாகத் தெரியும் ஆனால் அவர்களுக்கு தேவை உண்மை அல்ல அவர்களின் விருப்பம் அப்படி அவர்களின் விருப்பத்திற்காக எங்களது வரலாற்று அடயாலத்தை விட்டு கொடுக்க முடியுமா?
கொலைகாரர் , ஒண்டிபுலியார்,நெடுநாடர்.
Deleteசிரிப்பா இருக்கு நீ சொல்லிருக்குறத பார்த்தால். உனக்கு சாதியை பற்றிய புரிதல் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. காரணம் ஒரு சாதியில் தமிழகம் முழுவதும் ஒரே பழக்கவழக்கம் கொண்டிருப்பதை போல பேசியிருக்கிறாய்.. கள்ளர்லளில் பல ஏற்ற தாழ்வுகள் சாதிக்குள்ளே உண்டு அதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாட்டு அமைப்பிற்கும் ஒவ்வொரு சம்பர்த்தாய செய்முறைகள் உண்டு.. இந்த செய்முறைகள் நாட்டிற்கு நாடு மாறுபடும்... கள்ளர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டில் எந்த சாதியினராக இருந்தால்லும் ஒவ்வொரு நாட்டு அமைப்பிற்கு ஏற்றற்போல் அவர்கள் சம்பர்த்தாய நிகழ்வுகள் இருக்கும்.. எடுத்துக்காட்டிற்கு நம்முடைய பகுதியில் இருக்கும் 4,5 அகமுடையார்கள் 11 நாடு அகமுடையார்களுடன் மன உறவு கொண்டிருப்பதில்லை இதில் 11 நாடு அகமுடையார்கள் தாங்கள் உயர்ந்தவர்களாக தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்..4,5 அகமுடையார்களோடு அவர்கள் எந்த வித உறவும் வைத்துக்கொல்வதில்லை அப்படியானல் இருவரும் வேறு வேறு சாதியா? ஒரு நாடு என்பது அந்த நாட்டிற்கு என்று ஒரு கட்டமைப்பை கொண்டு பழக்கவழக்கம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே சமுதாயமாக இருந்தால்லும் மாறுபடும்... இது தெரியாமல் பெரிய அறிவு ஜீவிப்போல பேசியிருக்க... அடுத்ததாக பட்ங்களை குறிப்பிட்டு அந்த பட்ங்களில் அனைத்திலும் கடைசியில் ர்ர் சேர்த்துக்கொண்டால் வெறுசாதியாக காட்டாலாம் என்று உனக்கு யாரு சொன்னது 😂😂😂.. கருங்காடன் முத்தரையறுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? கருவேடன் என்ற பெயரின் திரிபுரா சொல்தான் கருங்காடன்... அந்த பட்டாத்தை தாங்கிய முத்தரையர்கள் திருமயம் பகுதியிலும் வாழ்கிறார்கள்... அது சரி இந்த பட்ங்களை எந்த சாதி பட்த்தோடு ஒப்பிட்டு நீ வேறு சாதி என்று முடிவுக்கு வந்த🤭🤭. கள்ளர் சாதியின் பட்ங்களோடுதான் ஒப்பிட்டு வந்திருப்ப என்று எடுத்துக்கொள்கிறேன்.. கள்ளர்கள் குற்றப்பறம்பரை சட்டத்தில் இருந்து வெள்ளைகாரனிடம் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்க்கு வந்த படி ஒரு 2000 பட்டங்களை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதில் இனிமேல் தமிழக்குடிகளில் வேறு எந்த சமுதாயம் தாங்கி இருக்கும் பெயர்களும் மீதம் இல்லாமல் தெலுங்கு சாதி பெயர்களைக்கூட பட்ங்களாக வைத்திருக்கிறார்கள். (ஏ.கா) வன்னியர், நாடார், கோனார், முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர், ரெட்டி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த பெயர்களில் எல்லாம் தனி சாதிகள் இருக்கிறது ஆனால் இந்த பெயர்களில் கூட கள்ளர்கள் பட்டம் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.. பட்ங்களை வைத்து சாதியை கணக்கிடுவது போன்ற ஒரு அறிவிழித்தனம் எதுவும் இல்லை என்று அனைத்து சாதி வரலாற்று ஆய்வாறிஞர்களும் சொல்லுவார்கள். ஆனால் நீங்க சாதியை பட்த்தை வைத்து கணக்கிட்டு கொண்டிருக்கிறாய்.
Deleteபெண் கொடுத்து எடுப்பது வைத்து தான் ஒரே ஜாதி என்று அடையாளப்படுத்துவது நகைப்புக்குரியதாக உள்ளது , ஒரே ஜாதியை சேர்ந்த உங்களுக்குள் பல இடங்களில் புண் கொடுத்து பெண் எடுப்பது விவகாரம் இல்லை, அதற்காக அவர்கள் அனைவரும் வேறு ஒரு சமுதாயம் என்று கூற முடியாது.....
Deleteதமிழ்நாட்டில் எத்தனை ஜாதிகளில் அவர்களது திருமண சடங்கும் இறப்பு சடங்குகளும் ஒரே மாதிரி ஒத்த ஜாதிகள் பல உள்ளன ஆனால் வேறு வேறு ஜாதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
அவர்களின் குலதெய்வ வழிபாடு அவர்களின் தொண்டு தொட்ட வாழ்வியல் இவற்றையெல்லாம் வைத்து தான் குடி அடையாளம் நிர்ணயம் செய்யப்படுகிறது
நீங்கள் சொல்லும் பகுதியில் நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் துன்புறுத்து வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கும் இவர்களுக்கும் என் மன உறவு இல்லை அப்படி என்றால்....
என் இருவரும் ஒரே சமுதாயத்தினர் என்று கூட கூறிக் கொள்வதில்லை அவர்கள் வேறு என்று தனித்தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள் அப்படி என்றால் இவர்கள் இருவருக்கும் ஏன் உறவு முறை இல்லை
பட்டங்களை வைத்து ஜாதி அடையாளம் கட முடியாது தேவர் பட்டம் பல்வேறு சமுதாய மக்களுக்கு உள்ளது
ஊர் தலைவர்களை அம்பலம் என்று அழைப்பார்கள் ஏன் பறையர் சமுதாயத்தில் கூட அம்பலம் என்ற பட்டம் உள்ளது உடனே அவர்களையும் நீங்கள் கல்லல் என்று கூறி விடுவீர்களா.....
தலைமை நாட்டு கிராமங்கள் எத்தனை அந்த கிராமங்களின் பெயர்கள் என்ன. எனக்கு அவசியம் பதில் அளிக்க வேண்டும் நன்றி நண்பரே
ReplyDeleteசிவகிரி.
ReplyDeleteஅழகாபுரி
ஏழாயிரம் பன்னை ஜமீன்கள்.
மறவர்
வன்னியர்
வலையர்
இவர்களில்
எந்த ஜமீன்கள்.