Saturday, 3 December 2016

வேட்டைகுடிகள்

தொடக்க காலத்தில் வேட்டைக் குடிகள் உபயோகித்த வளைதடி , நீண்ட காலப் பயிற்சிக்குப் பின்னரே போர் ஆயுதமாக பரிணாமம் பெற்றது. குறிப்பாக தென்மாவட்ட வலையரின மக்கள் இன்றும் வளரியைத் தமது வேட்டுவப் பாரம்பரியத்தின் தொன்மமாகக் கருதி போற்றி வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலும், பாரிவேட்டம் போன்ற மரபு வழிப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளிலும் வளரியின் பங்கு முதன்மையானது... வளரி இடம்பெறாமல் இந்தச் சடங்குகள் நடைபெறாது.

திருவிழாக் காலங்களில் சாமி ஊர்வலத்தின்போது வலையர்களில் மூப்பர்கள் இந்த வளரியையும் சேர்த்து எடுத்துச் செல்லும் நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது... மேலும் கடந்த நூற்றாண்டுகளில் திருமண நாள்குறிப்பின்போது (நிச்சயதார்த்தங்களில் ) மணமகன் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டால் , மணமகனின் சார்பாக அவரது சகோதரி வளரியை மணமகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று அதைக் கொண்டு சடங்குகளைச் செய்ததாக சொல்லப்படுகிறது... எப்படியாகினும் வளரிக்கும் வலையருக்குமான உறவுகள் பாரம்பரியமாக இன்றளவும் தொடர்ந்தே வருகிறது. குறிப்பாக மேலூர் பகுதி வலையர்களின் இல்லங்களில் வளரியை அதிகம் காணலாம்.

படம்: கோவை செம்மொழி மாநாட்டு மலரின் கட்டுரை...

2 comments: