பிரான்மலை எனும் பறம்புமலை..,
மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் கிடக்கிற பல வரலாறுகளின் மௌனசாட்சியமாக நூற்றாண்டு கடந்தும் கம்பீரம் குறையாமல் நிமிர்ந்து நிற்கிறது பாரி மன்னன் கட்டி ஆண்ட பறம்புமலை.. இரண்டாயிரம் அடிக்கும் மேற்பட்ட மலையின் மீதேறி நின்றுகொண்டு உச்சிப் பாறையின் மேற்குச் சரிவில் ஊன்றி நிற்கிற வெட்டருவாளையும் வேல் கம்பியையும் நேர்நின்று வணங்கிவிட்டு நாலாபுறமும் பார்வையை வீசினால் பார்வைக்குத் தட்டுப்படும் அத்தனை கிராமங்களிலும் பாரி காலம் தொடங்கி அம்மண்ணின் பூர்வகுடிகளாக இருக்கின்ற ' செட்டிநாட்டு வலையர்'களின் சிற்றூர்கள் சின்னச் சின்னதாய் சிதறிக் கிடக்கிறது... ஒரு காலத்தில் கோட்டையின் காவலர்களாக பணிசெய்த வலையர்களின் குல தெய்வமே பைரவராக இன்றும் அடிவாரத்தில் கோயிலுக்கு காவலிருக்கின்றார்!
அண்ணன் இரா. சுந்தரவந்தியத்தேவன் அவர்கள் தமது "பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலில் (பக்கம் 114, 115) கூறியுள்ளபடி பாரியின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்ற 'ஆரூர்வட்டகை ஏழூர் பத்து' நாட்டின் வலையர்குலத்தின் "உறங்கான் வள்ளிப்பச்சை" வகையறாக்களின் கொடுங்குன்ற நாதரான மங்கைபாகர் கோயிலின் வழிபாட்டு உரிமைகளும், அவர்கள் நடத்துகின்ற பாரிவேட்டச் சடங்குகளும் பாரிமன்னனின் தொன்மத்தையும், வேட்டைக் குடியான வலையர்களுடனான பாரியின் உறவையும் நமக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...
அண்ணன் இரா. சுந்தரவந்தியத்தேவன் அவர்கள் தமது "பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்" நூலில் (பக்கம் 114, 115) கூறியுள்ளபடி பாரியின் வம்சத்தவர்களாகக் கருதப்படுகின்ற 'ஆரூர்வட்டகை ஏழூர் பத்து' நாட்டின் வலையர்குலத்தின் "உறங்கான் வள்ளிப்பச்சை" வகையறாக்களின் கொடுங்குன்ற நாதரான மங்கைபாகர் கோயிலின் வழிபாட்டு உரிமைகளும், அவர்கள் நடத்துகின்ற பாரிவேட்டச் சடங்குகளும் பாரிமன்னனின் தொன்மத்தையும், வேட்டைக் குடியான வலையர்களுடனான பாரியின் உறவையும் நமக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது...
மேலும் சுந்தரவந்தியத்தேவன் அவர்கள் தமது ஆய்வின் வாயிலாக பிரான்மலையில் வாழும் வலையர்களில் செட்டிநாட்டு வலையர்கள் மட்டுமல்லாமல் சருகு வலையர், கள்ள வலையர், ராச வலையர், தாலிக்கட்டி வலையர் போன்ற பூர்வகுடி முத்தரையர் பிரிவினரோடு தானம நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்த "தானமநாட்டு வலையர்களும்" பிரான்மலையில் வசித்து வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.
வியர்க்க விறுவிறுக்க மூச்சைப் பிடித்து மலையில் ஏறி சுணையின் தீர்த்தத்தில் முகத்தைக் கழுவிக் கொண்டு அந்த சில்லிட்ட காற்றில் பாறையில் படுத்துக் கொண்டு இவை அத்தனையையும் அசைபோடுவதில் ஒருவகை மகிழ்வு இருக்கத்தான் செய்கிறது..!
This comment has been removed by the author.
ReplyDeleteகள்ள வலையரா? இப்போதும் உள்ளனரா?
ReplyDeleteகள்ள வலையரா? இப்போதும் உள்ளனரா?
ReplyDelete